எது இனிது?
நேசம் நிறைந்து நடை பழகும் விதம் இனிது
காலம் மறந்து நின்ற ,பொழுதுகள் இனிது
வானடியில் நெஞ்சோடு உறையும் காட்சிகள் இனிது
இசையோடு கால்கள் கடக்கும் வீதிகள் இனிது
வார்த்தை உதிர்க்கும் இதழ் பேச மறந்து நிற்கும் தருணம் இனிது
சட்டென சிதறும் சில சிரிப்புகள் இனிது
புது மோகம் தரும் சுகம் இனிது
இயல்புகள் தரும் இன்பங்கள் இனிது
யாதும் அறியா பேதை மனது ரசிக்கும் யாவும் இனிது
அறிமுகம் இல்லா உன்னை அறிந்த நொடி இனிது !
நீ இல்லா நேரங்களும் இனிது
காதல் கடந்த பின்பும் வாழும் வாழ்க்கையும் இனிது
எது இனிது?
யாவும்!
:)
<3
:)
<3
So refreshing! So abhii 😃
ReplyDeleteHehhe :)
Delete