புதிர்

 புரியா பொருள் தேடி…!



கண்ணைக்கட்டிவிட்டு வரும் காட்சியெல்லாம் நீயா, நீலமா?

மதிக்கு வண்ணம் பூசி காற்றோடு பறக்கவிட்டு நானும் பறக்கவா?

நீருக்குள் குதித்தபின் வரும் நிசப்தம், பாடலா? நீர்த்திரையா?

கையிக்குள் காற்றையடைத்துகாட்டியது, குமிழியா? அல்லது எல்லாம் என் கற்பனையா?

காலம் கண்டெடுத்த வானம், என் கனவா? நிஜமா?

பாதைமாறி தொலைந்தபின் என் நிழழோடு கைகோர்த்து நானும் நடக்கவா?

என்னோடு என்றென்றும் வரும் என் கதைகள், என் நண்பனா, சுமையா?

வாழ்க்கையின் வலி மாறாத, காயமா? நுண் கலையா? , கானலா?

சிந்தையில் எழுந்தது சிந்தனைகள் மீண்டும் வெளிச்சம் காட்டுமா?

நின்ற இடத்திலேயே நின்று ரசித்தது நட்சத்திரங்களயா, மின்மினியா?

திங்கள் போன்று ஒவ்வொரு முறையும் புதிதாக அறிமுகமாகவா??

Comments

Popular Posts